சமுக நலனில் மிகுந்த அக்கறையுடன் மௌனமாக மக்கள் சேவை நடத்தி வருகிறார் நடிகர் விஷால். அவர் நடிக்கும் ‘மருது’ என்ற திரைபடத்தின் படப்பிடிப்பு ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது.
ராஜபாளையம் நகராட்சி பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ மற்றும் தமிழக முதல்வர் ‘தொழில் நோக்கு திட்ட’த்தின்படி, திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க மத்திய அரசின் நிதி உதவியுடன் ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதிகளில் சுகாதாரமான முறையில் செப்டிக் டேங்க் வசதியுடன் விடு தோறும் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.
அரசின் மானியம் கிடைத்தாலும் கட்டுமான பணிக்கு அதற்குமேலும் பணம் செலவாகும் என்பதால் ஊர் மக்கள் கழிப்பறை கட்டும் வேலையை நிறுத்தியிருப்பது விஷாலின் கவனத்திற்கு சென்றது,
அதனை தொடர்ந்து விஷால் தன் சக நடிகர்களான நடிகை ஸ்ரீதிவ்யா, நடிகர் சூரி ஆகியோருடன் அந்த பகுதியை பார்வையிட்டு பண உதவி தேவைப்படும் பத்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தேவைப்பட்ட உதவி தொகையான ரூபாய் 80 ஆயிரத்தை ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி முன்னிலையில் அவர்களிடம் வழங்கினார்.
அதனை தொடர்ந்து நடிகை ஸ்ரீதிவ்யா, நடிகர் சூரி மற்றும் படக் குழுவினர்களும் தங்களது பங்கை பொதுமக்களுக்கு அளித்தனர். விஷால் ஊர் மக்களுக்கு இப்படி தன்னார்வத்துடன் உதவி அளிக்க முன் வரவே ஊர் முக்கியஸ்தவர்களும் உதவி அளிக்க முன் வந்து அவர்களும் 200-க்கும் மேற்பட்ட கழிவறைகளை கட்டிக் கொடுக்க முன் வந்துள்ளனராம்.