ட்ராகன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரகு பாலனின் தயாரிப்பிலும், மேனுவல் பெனிட்டோ நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஒய்.ரோல்டனின் இணைத் தயாரிப்பிலும் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’.
இப்படத்தில் நாயகனாக தயாரிப்பாளர் ரகு பாலனே நடித்திருக்கிறார். நாயகியாக ஆஷிக்கா நடித்துள்ளனர். இவர்களுடன் டி.பி.கஜேந்திரன், கிரேன் மனோகர் , மகாநதி சங்கர், ரஞ்சன், ஜெயசூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – ரகு பாலன், எழுத்து, இயக்கம் – பாஸ்கர், கதை – ஜோஷி சேவியர், இசை – சாதிக் ஹாசன், ஒளிப்பதிவு – கொளஞ்சி குமார், கலை – டென்னிஸ் சிக்ஸ்டஸ், படத் தொகுப்பு – பிரேம், நடனம் – ரவி தேவ், சண்டை பயிற்சி – பம்மல் ரவி, நோபர்ட் எரிக், மக்கள் தொடர்பு – ஆனந்த்.
இப்படம் பற்றி இயக்குனர் பாஸ்கர் பேசும்போது, “நான்கு உதவி இயக்குநர்கள் காவல் துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார்கள், அதே நேரம் அந்த காவல் துறையின் விசாரணையில் ஒவ்வொரு உதவி இயக்குநரும் ஒரு கதை சொல்கிறார்கள்.
இவர்கள் கூறும் கதை கடத்தப்பட்ட தம்பதியினரை கண்டுபிடிக்க உதவியாக இருக்கிறது. இந்த தம்பதிகள் ஏன் கடத்தப்பட்டார்கள்..? எதற்கு கடத்தப்பட்டார்கள்..? என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாக கூறுவதே இந்த ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்..” என்றார்.
இப்படத்தின் படபிடிப்பு சென்னை, கோவை, பாண்டிசேரி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.