full screen background image

விநியோகஸ்தர் சிங்காரவேலன் புதிய தயாரிப்பாளர் சங்கத்தைத் துவக்குகிறார்..!

விநியோகஸ்தர் சிங்காரவேலன் புதிய தயாரிப்பாளர் சங்கத்தைத் துவக்குகிறார்..!

தமிழ் திரையுலகத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்ட பிரபல விநியோகஸ்தர் சிங்காரவேலன், புதிய தயாரிப்பாளர் சங்கத்தைத் துவக்குகிறாராம்.

‘லிங்கா’ பட நஷ்ட ஈடு விவகாரம் தொடர்பாக இவரது தலைமையிலான விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர் கவுன்சிலுக்கும் இடையில் பலத்த மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் சிங்காரவேலனுக்கு ரெட் கார்டு போட்டது தமிழ்த் திரையுலக கூட்டமைப்பு. இதன் மூலம் சிங்காரவேலனுடன் எவ்வித வர்த்தகத் தொடர்பையும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

இதன பின்பு கடந்த வாரம் எழுந்த ‘பாயும் புலி’ படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையின் பின்னாலும் சிங்காரவேலன்தான் இருக்கிறார் என்று பேசப்பட்டது. 

இந்த நேரத்தில் புதிய தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை தான் ஆரம்பிக்க இருப்பதாக இன்று அறிவித்திருக்கிறார் சிங்காரவேலன்.

அவருடைய அறிவிப்பு இதுதான் :

“புதிய தயாரிப்பாளர் சங்கத்தின் துவக்க விழா வருகின்ற செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.

சிறிய படத் தயாரிப்பாளர்களின் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றான சாட்டிலைட் வியாபாரச் சிக்கலைத் தீர்க்கும் முயற்சியின் முதல் கட்டமாக சங்கத்தி்ன் துவக்க தினததன்றே… படம் வெளியாகி இன்னமும் சாட்டிலைட் உரிமை விற்கப்படாத படங்களில் இருந்து நமது சங்கத்தில் புதிதாக இணையும் உறுப்பினர்களின் 5 படங்களின் உரிமையை சங்கமே வாங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலில் வருபவர்களுக்கே முன் உரிமை வழங்கப்படும்.

இந்த புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் இணைய விரும்பும் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி newproducercouncil@gmail.com.”

இது எத்தனை நாளைக்கு தாங்கும்..?

Our Score