பிரபல தமிழ், தெலுங்கு நடிகையான சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவுக்கும் நேற்று கோவாவில் கோலாகலமான முறையில் திருமணம் நடந்தது.
கோவாவில் Vagator Beach-ல் உள்ள W Hotel-ல் இந்தத் திருமணம் நடந்தேறியது. சமந்தா கிறித்துவர் என்பதால் இந்து, கிறித்துவ முறைப்படி இரண்டு முறை திருமணம் நடக்கிறது.
இதன்படி இந்து முறைப்படி திருமணம் நேற்று மாலை துவங்கி இரவுவரையிலும் நடைபெற்றது. இரவு 11.52 மணிக்கு இந்து முறைப்படி மாலை ்அணிவித்து தம்பதிகளானார்கள் சமந்தாவும், சைதன்யாவும்.
இன்று மாலை கோவாவில் இருக்கும் கிறித்துவ சர்ச்சில் கிறித்துவ முறைப்படி இருவரின் திருமணமும் நடைபெறவிருக்கிறது.
மிக நெருங்கிய குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டுமே இந்த திருமண விழாக்களில் கலந்து கொண்டனர்.
தம்பதியினரின் திருமண வரவேற்பு அடுத்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.