full screen background image

“ரம்’ படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும்” – நரேன் உறுதி!!!

“ரம்’ படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும்” – நரேன் உறுதி!!!

நடிகர் நரேன் முதல் படம் தொட்டு இன்றுவரை தனது படங்களை தேர்வு செய்வதில் மிக்க சிரமம் எடுத்து கூடுதல் கவனம் செலுத்தி நடிப்பவர் என பெயர் பெற்றவர். அப்படி வந்ததுதான் ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ மற்றும் ‘முகமூடி’.

இதற்கு இடையில் சிறிய சறுக்கல்கள் இருந்தாலும் பெரும்பாலும் நல்ல படங்களில் பணியாற்றி தனது பணியை திறம்பட செய்பதில் நரேன் வல்லவர். சமீபத்தில் வெளியான ‘கத்துக்குட்டி’ படமும் அந்த வகையே. இதனை தொடர்ந்து நரேன் தற்போது நடித்து வரும் படம் ‘ரம்’.

இந்தப் படம் பற்றி நரேன் பேசும்போது, “இது நான் நடிக்கும் முதல் திகில் கலந்த பேண்டசி படம் என்பதால் பெரும் மகிழ்ச்சியுடன் இந்த படத்தில் நடித்தேன். இந்த படத்தில் என்னுடன் அனுபவம் வாய்ந்த நடிகரான விவேக்கும் நடித்திருக்கிறார். இவருடன் நடித்ததில் மிக்க மகழ்ச்சி அடைவதோடு பெருமையும் அடைகிறேன்.

இந்த படம் நிச்சயம் ரசிகர்களை திகில் பயத்தில் உறைய வைக்கும். ஒரு புதிய அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு வாரி வழங்கும், அனிருத் இசையமைப்பு என்றாலே படத்துக்கு ஒரு கெத்து வந்து விடும், அந்த வகையில் அவருடைய இசை அமைப்பில் நான் நடித்து இருப்பதிலும் எனக்கு பெருமையே..” என்றார்.

‘மசாலா’ படத்தை தயாரித்த ஆல் வின் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க, சாய் பாரத் இயக்க புதுமுகம் ஹ்ரிஷிகேஷ், ஷெட்டி, மியா ஜார்ஜ் நடிக்க அவர்களுடன் விவேக், நரேன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ரம்’ திரைப்படம் ரசிகர்களுக்கு கிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்..!

Our Score