full screen background image

‘காலா’ படத்தின் வெளியீட்டைத் தடுக்க சதி திட்டம் – தயாரிப்பாளர் தாணு குற்றச்சாட்டு..!

‘காலா’ படத்தின் வெளியீட்டைத் தடுக்க சதி திட்டம் – தயாரிப்பாளர் தாணு குற்றச்சாட்டு..!

சில நாட்களுக்கு முன்பாக ‘கபாலி’ படத்தின் விநியோக உரிமையைத் தருவதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஏமாற்றிவிட்டார் என்று விநியோகஸ்தர் ஜி.பி.செல்வகுமார் திடீர் குற்றச்சாட்டை மீடியாக்கள் முன் வைத்திருந்தார்.

இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விளக்கமளித்துள்ளார்.

தாணு பேசுகையில், “கபாலி’ படம் நஷ்டம் என கூறுவது முற்றிலும் பொய். ‘கபாலி’ மாபெரும் வெற்றி படம். சென்னையில் மட்டுமே 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

ஜி.பி.செல்வகுமாருக்கும், ‘கபாலி’ படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. செல்வகுமார் ‘கபாலி’ படத்தை வாங்கவில்லை, விநியோகஸ்தர் வேணுகோபாலுக்கு சாட்சி கையழுத்து போட வந்தவர்தான் செல்வக்குமார். .அவர் அழைத்து வந்த, வேணுகோபால் என்பவர்தான் ‘கபாலி’ படத்தின் விநியோக உரிமையை வாங்கினார்.

Thaanu

‘கபாலி’ படம் தொடர்பாக வேணுகோபாலுக்கும் எனக்குமான பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன. இதுவரை 61 லட்சம் ரூபாய்வரையிலும் அவருக்கு நேரடியாகவும், சேலம் பகுதியில் அவர் தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவருக்கு நான்  உதவியிருக்கின்றேன்.

யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையை  கேட்டு உதவி செய்வது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பழக்கம். அதைப் பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத்தான் ‘கபாலி’ படம் நஷ்டமென்று இப்போது புதிய சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்..

தற்போது ‘கபாலி’ படம் நஷ்டம் என்று பொய்களை கூறி, அடுத்து வரவிருக்கும் ரஜினி சாரின் ‘காலா’ படத்திற்கு தேவையில்லாத குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும்…” என்று விளக்கமாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறினார்.

Our Score