full screen background image

பிரச்சினைகளுக்காக நான்கு பேரும் ஓடுவதுதான் படமே..!

பிரச்சினைகளுக்காக நான்கு பேரும் ஓடுவதுதான் படமே..!

30 வருடங்களாக மிகவும் பிரபலமான நிறுவனமாக விளங்கும் மூலன் குரூப் நிறுவனத்தின் தலைவர் விஜய் மூலன் தயாரிக்கும் முதல் படம் ‘ஓடு ராஜா ஓடு’. கலையின் மீது கொண்ட காதலால் திரைப்படத் துறையில் தடம் பதித்துள்ளார்.

சாருஹாசன், நாசர், குரு சோமசுந்தரம், ஆனந்த்சாமி, லக்ஷ்மி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், மெல்வின் எம். ரஞ்சன், வினு ஜான், சோனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜதின் ஷங்கர் ராஜ், இசை – டோஷ், மக்கள் தொடர்பு – நிகில், திரைக்கதை மற்றும் படத்தொகுப்பு – நிஷாந்த் ரவீந்திரன், இயக்கம் – நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர் ராஜ், தயாரிப்பு – விஜய் மூலன்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர்களில் ஒருவரான நிஷாந்த் ரவீந்திரன், “நான்கு கதாபாத்திரங்களுக்குள் ஒரு நாளில் நடக்கும் கதைதான் படமே. நான்கு பேருக்கும் ஒவ்வொரு இலக்கு உண்டு. அதனை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள். இந்த நால்வரும் ஒருவரையொருவர் சந்திக்கையில் என்ன நேர்கிறது என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் திரைக்கதையை அமைத்து குடும்பத்துடன் ரசித்து பார்க்கும்படியாக எடுத்திருக்கிறோம்..” என்றார்.

Our Score