full screen background image

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த மீராஜாஸ்மினின் கல்யாணம்..!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த மீராஜாஸ்மினின் கல்யாணம்..!

நடிகை மீரா ஜாஸ்மின், 2 நாட்களுக்கு முன்பாக அவசரமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டது ஏன் என்று நேற்றைக்குத்தான் தெரிய வந்துள்ளது..!

மணமகன் அனில் ஜான் டைட்டஸுக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் போனில் மிரட்டல் விடுத்தாராம். தான்தான் அவருடைய மனைவி என்றும்.. மீராவை அவர் கல்யாணம் செய்யக் கூடாதென்றும், மீறி செய்தால், கல்யாணத்தன்று திருவனந்தபுரத்திற்கு வந்து ரகளை செய்யப் போவதாகவும் போனில் டைட்டஸுக்கு, டைட் கொடுத்துள்ளார். 

இதனால் பயந்து போன இரு வீட்டுக் குடும்பத்தாரும் முன்னாடியே முந்திக் கொள்வோம் என்று நினைத்துத்தான் அவசரம், அவசரமாக திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.  

மேலும் ஜான் டைட்டஸ் நேற்றைக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். தன்னை ஒரு பெண் மிரட்டுவதாகவும், அதனால் தன்னுடைய திருமணத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அவருடைய வேண்டுகோளை ஏற்று கல்யாணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்றைக்கு திருவனந்தபுரத்தில் உள்ள சர்ச்சில் மீரா ஜாஸ்மினின் திருமணம் நடந்தேறியுள்ளது. திருமணத்தில் பல நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

திருமண வீடியோ இங்கே :

Our Score