full screen background image

இயக்குநர்கள் சங்கத்தில் கே.பாலசந்தர் திரையரங்கம் திறக்கப்பட்டது..!

இயக்குநர்கள் சங்கத்தில் கே.பாலசந்தர் திரையரங்கம் திறக்கப்பட்டது..!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சொந்தக் கட்டிடத்தின் மாடிப் பகுதியில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பெயரில் அமைக்கப்பட்ட புதிய திரையரங்கம் இன்று காலை திறக்கப்பட்டது.   

உதவி இயக்குநர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய  குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன்மேட் மற்றும் போட்டோசூட்  செய்வதற்காகவும்தான் இயக்குநர்கள் சங்கக் கட்டிடத்தில் இந்த மினி  திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த  திரையரங்கிற்கு  ‘இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டு. இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் இன்று திறக்கப்பட்டது.

சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் நாற்பது உதவி இயக்குநர்கள் குறும்படங்களை இயக்கி உள்ளார்கள். அதில் இரண்டு குறும்படங்கள் இன்று திரையிடப்பட்டது. இரண்டு படங்களும் சிறந்த படங்கள் என்று அந்தப் படங்களை இயக்கிய உதவி இயக்குநர்களை இயக்குநர் இமயம் பாரதிராஜா பாராட்டினார். 

“கே.பாலசந்தர்  தமிழ் திரையுலகில் பல வெற்றிகளை கண்டவர். பல சாதனைகளை பதிவு செய்தவர்.  அவரைப் போலவே இளம் இயக்குநர்களும், நாளைய இயக்குநர்களும் தங்களது சாதனைகளை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை..” என்றார் பாரதிராஜா.

விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பி .வாசு,கே. பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு குறும் படங்களை இயக்கிய உதவி இயக்குநர்களை பாராட்டி பேசினார்கள். கே.பாக்யராஜ் அவர்கள் சங்கத்தின் ‘ தமிழ் வெள்ளித் திரை’ என்ற  இணையதளத்தை துவைக்கி வைத்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் கலந்து கொண்டு பாலச்சந்தர், பாரதிராஜா இருவரைப் பற்றிய குறும்படங்களை   துவக்கி வைத்தார்.

தலைவர் இயக்குநர் விக்ரமன் வரவேற்று பேசினார். செயலாளர் ஆர்கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர் இருவரும் சிறப்புரையாற்றினார்கள்.

Our Score