full screen background image

“த்ரிஷாதான் எனக்கு மிகவும பிடித்த நடிகை…” – நடிகர் ஜெயம் ரவியின் ஓப்பன் டாக்

“த்ரிஷாதான் எனக்கு மிகவும பிடித்த நடிகை…” – நடிகர் ஜெயம் ரவியின் ஓப்பன் டாக்

லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘சகலகலாவல்லவன்’. இது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 27-வது படம்.

இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். அஞ்சலி, திரிஷா இருவரும் ஹீரலோயின்களாக நடிக்கின்றனர். மேலும் பிரபு, சூரி, விவேக், ராதாரவி, அஸ்வின், ரேகா, ஜான் விஜய், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய ஆர்.கே.செல்வா எடிட்டிங் செய்திருக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அண்ணாமலை மூவரும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். ராபர்ட், சதீஷ் இருவரும் நடன பயிற்சியை அளிக்க.. தளபதி தினேஷ் சண்டை பயிற்சியை மேற்கொண்டுள்ளார். மருதமலை, வின்னர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சுராஜ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.

IMG_0542

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் ஜெயம் ரவி, அஞ்சலி, திரிஷா, இயக்குநர் சுராஜ், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

படத்தின் துவக்கத்தில் டிரெயிலரும் 3 பாடல் காட்சிகளையும் திரையிட்டார்கள்.  திரிஷா, அஞ்சலியுடன்னான டூயட்டுகளும், டிரெயிலரில் இருந்த சில வசனங்களும் ஜலீர் வகையில் இருந்தன.

IMG_0385

விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, “எனக்காகக் காத்திருந்து.. என்னை வைத்துத்தான் அடுத்த படத்தைத் தயாரிப்போம் என்று காத்திருந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு எனது முதல் நன்றி.  லட்சுமி மூவி மேக்கர்ஸுக்கு ‘தாஸ்’ படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் இரண்டாவது படம் இது.

அடிப்படையில் இந்த இயக்குநர் சுராஜை எனக்குப் பிடிக்கும் அவரது காமெடிக்கு நான் விசிறி. எப்போதும் நான் சீரியாஸாகத்தான் கதை கேட்டேன் அப்படித்தான் என்னைப் பற்றிச் சொல்வார்கள். இந்தக் கதையை சுராஜ் சொன்ன போது சிரித்துக் கொண்டே கேட்டேன். 

ஆனாலும் ஆரம்பத்தில் கொஞ்சம் யோசிச்சேன். ஏன்னா நான் இதுவரைக்கும் பக்காவான காமெடி படத்துல நடிச்சதில்லை. ‘தில்லாலங்கடி’ படம் காமெடிதான் என்றாலும் அதில் கொஞ்சம்தான் காமெடி இருக்கும். ஆனால் இந்தப் படத்துல கதையே காமெடியா இருக்கிறதால ஒரு வித்தியாசத்துக்கு செய்துதான் பார்ப்போமே என்றெண்ணத்தில் ‘ஓகே’ன்னு சொல்லிட்டேன்.

இந்த ‘சகலகலாவல்லவன்’ என்கிற தலைப்புக்கு நான் அருகதையானவனா என்று தெரியாது. ஆனால் அந்த  ‘சகலகலாவல்லவன்’ வேறு; இந்த  ‘சகலகலாவல்லவன்’ வேறு. ‘அப்பாடக்கர்’ என்றால் ‘அனைத்தும் கற்றவன்’ என்று அர்த்தம் வந்ததால் இந்த தலைப்பை வைத்தோம்.

படப்பிடிப்பில் த்ரிஷாவிடம் நான் பேசினாலே கேமராமேன் செந்தில்குமாருக்குப் பிடிக்காது. உடனே ‘ஷாட் ரெடி’ என்று  அழைப்பார். காரணம் பொறாமையல்ல.. அந்த அளவுக்கு வேகமாக உழைத்தார். படத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. தினேஷ் மாஸ்டரின் பையன் ஹரிதான் மாஸ்டர். எனக்கு முதலில் நம்பிக்கை வரவில்லை எடுத்த்தை பார்த்ததும் நம்பிக்கை பிறந்தது.  

த்ரிஷாவும் நானும் பத்து, பன்னிரண்டு ஆண்டுகளாக சினிமாவில் பயணம் செய்து வருகிறோம். இதில் அவர் தமிழில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும்.  த்ரிஷாவுடன் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது.

எல்லாரும் கேட்கிறார்கள், ‘த்ரிஷாவை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா.. தொடர்ந்து நடிக்கிறீர்களே..?’ என்று.   ஆமாம்.. த்ரிஷா எனக்கு ரொம்பப் பிடித்த நடிகை. இதில் சந்தேகமில்லை.. இதிலென்ன தப்பு..? த்ரிஷா எனக்கு நல்ல நண்பர். அவர் எல்லா விஷயத்திலும் தெளிவாக இருப்பார். அந்தத் தெளிவு எனக்குப் பிடிக்கும்

இதில் நடித்திருக்கும் அஞ்சலிக்கும் இதில் நல்ல கேரக்டர்தான். இந்தப் படத்துல ஒரு ஹீரோயின் கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சம் கிராமத்தனம்மாவும், அடாவடியாவும் இருந்தது. இந்த கேரக்டருக்கு அஞ்சலி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலியை சிபாரிசு செய்தது நான்தான்.

மற்றவர்கள் 10 படத்தில் கமர்ஷியலாக நடித்தால் ஒரு படத்தில்தான் சோதனை முயற்சியாக நடிப்பார்கள். அஞ்சலி 10 படத்தில் சோதனை முயற்சியாக நடிப்பவர். ஒரு படத்தில் மட்டும்தான் கமர்ஷியலாக நடிப்பவர். 

பிரபு சார் என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி இதில் அவர் என் அப்பாவாக நடித்து இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேல் சூரி நன்றாக நடித்துள்ளார். அவர் அடுத்த காமெடி  சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார். விவேக் சார் ஈகோ பார்க்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். ‘குமரன் சன் ஆப் மகாலட்சுமி’க்குப் பிறகு அவருடன் நடித்தேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

இதை வெறும் காமெடி படம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஒரு நல்ல கதையில் முக்கியமான ஒரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்தாலே கூட்டுக் குடும்பம் என்பார்கள்  போலிருக்கிறது.

இன்றைக்கு திருமண அமைப்பு மீது இப்படியொரு ஊசலாட்டம் இருக்கிறது. அவ நம்பிக்கை நிலவுகிறது அதற்கு இந்தப் படத்தில் ஒரு நல்ல பதில் சொல்லப்பட்டு உள்ளது. நமது பலம் திருமணம், குடும்பம் என்று சொல்லப்பட்டு உள்ளது. முழுப் படமும் காமெடியாக எடுக்கப்பட்டுள்ளதால் இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும்னு நம்புகிறேன்..” என்றார்.

Our Score