full screen background image

திகிலும், காதலும் கலந்த திரைப்படம் ‘என்னோடு நீ இருந்தால்’

திகிலும், காதலும் கலந்த திரைப்படம் ‘என்னோடு நீ இருந்தால்’

சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.யசோதா தயாரித்துள்ள படம் ‘என்னோடு நீ இருந்தால்.’

இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடித்துள்ளார். மற்றும் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி,  ரோகிணி, அஜய் ரத்னம்,  வையாபுரி, பிளாக் பாண்டி, அழகு, மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி, ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – நாக.சரவணன், இசை – கே.கே, படத் தொகுப்பு – ராஜ்கீர்த்தி, கலை – எஸ்.சுப்பிரமணி, நடனம் – கேசவன், சண்டை பயிற்சி – ‘ஸ்டன்ட்’ ஜி, தயாரிப்பு மேற்பார்வை –  எஸ்.ஆனந்த், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுத்து, இயக்கம் – – மு.ரா.சத்யா. தயாரிப்பு – எஸ்.யசோதா.

படம் பற்றி இயக்குநர் மு.ரா.சத்யா பேசும்போது, “படத்தின் ஹீரோவான கிஷோர் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறான். ஒரு பணக்கார பெண்ணான பூஜா(மானஸா நாயர்) வை சந்திக்கிறான். அவர்களுக்குள் காதல் மலர்கிறது. திடீரென்று அவள் காணாமல் போகிறாள்.

அவளை பல இடங்களிலும் தேடுகிறான் கிஷோர். அப்போது அவனுக்கு திகில் சம்பங்கள் பல  நிகழ்கின்றன. அந்த திகில் சம்பவங்களைக் கடந்து பூஜாவை கண்டுபிடித்தானா இல்லையா என்பதுதான் படத்தின் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தில் திகிலுடன், காதலையும் கலந்து சொல்லி இருக்கிறோம். பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகி இருக்கிறது.  விரைவில் படம் வெளியாக உள்ளது…” என்றார் மு.ரா.சத்யா

Our Score