full screen background image

மீண்டும் நடிக்க வந்திருக்கும் இயக்குநர் மகேந்திரன்..!

மீண்டும் நடிக்க வந்திருக்கும் இயக்குநர் மகேந்திரன்..!

பிரபல இயக்குநரான பிரியதர்ஷனின்  இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு, துரித வேகத்தில் தென்காசி அருகே நடந்து வருகிறது.

மலையாளத்தில் பிரபலமான நமிதா பிரமோத், மற்றும் பார்வதி நாயர் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தர்பூகா சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவில் மூன் லைட்  எண்ட்டெர்டெயின்மெண்ட் என்கிற புதிய நிறுவனத்தின் சார்பில்  சந்தோஷ் டி.குருவில்லா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.  அத்துடன் இந்தப் படத்துக்கு அவரே வசனம் எழுதுகிறார் என்பதும் தெரிந்த விஷயம்தான்.

இப்பொழுது இந்த  படத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் விதத்தில் இயக்குநர் மகேந்திரன், இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை கூட்ட வைத்திருக்கிறது.

‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன், அதற்கு பின்னர் வந்த பல்வேறு வாய்ப்புகளை தவிர்த்து வந்தாராம். ஆனால் இயக்குநர் பிரியதர்ஷன்  வடிவமைத்த இந்த கதாப்பாத்திரம், மகேந்திரனை உடனடியாக  ஒத்துக் கொள்ள வைத்தது என்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர்.

Our Score