full screen background image

தனுஷைவிட வளர்ந்துட்டேன் – சிவகார்த்திகேயனின் ஒப்புதல் பேட்டி..!

தனுஷைவிட வளர்ந்துட்டேன் – சிவகார்த்திகேயனின் ஒப்புதல் பேட்டி..!

தனுஷ், சிவகார்த்திகேயன் நட்பு புட்டுக்குச்சு.. ‘டாணா’தான் சிவாவை வைச்சு தனுஷ் எடுக்கப் போற கடைசி படம்.. என்றெல்லாம் தினம்தோறும் தீபாவளியாக இவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் இணையவுலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இணையத்தளங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத நட்சத்திரங்கள், வாரப் பத்திரிகைகளுக்கு தாராளமாகவே மதிப்பளித்து தங்களது பேட்டிகளை வாரி வழங்குவார்கள்.

அப்படித்தான் நடிகர் சிவகார்த்திகேயனும் இன்றைய ‘குமுத’த்திற்கு விலாவாரியாக பேட்டியளித்திருக்கிறார். அதில் “தனுஷுடன் அவருக்கு மோதலா…?” என்ற கேள்விக்கு தெளிவாகப் பதில் அளித்தாலும்.. அதில் ஒரு உண்மையைச் சுற்றி வளைத்து சொல்லிவிட்டார்.

அது என்னவெனில், “சிவகார்த்திகேயனான நான் தனுஷைவிட வளர்ந்துவிட்டேன்…” என்பதுதான்..!

இனி சிவகார்த்திகேயனின் பேட்டி :

“எங்க நட்பு அப்படியேதாங்க இருக்கு. வர்ற நியூஸையெல்லாம் படிச்சிட்டு சிரிச்சிட்டுத்தான் இருக்கோம். இப்ப ரெண்டு பேருமே அவங்கவங்க படங்கள்ல பிஸிங்கிறதால, மீட் பண்ணி போட்டோஸ் எடுத்தெல்லாம் போடுறதில்லை.. அதுதான் முக்கியமா இந்த மாதிரி நியூஸ் வரக் காரணம்..!

அவர்தான் என்னோட அடுத்தப் படத்துக்கும் புரொடியூஸர். இன்னிக்கும் டெய்லி போன்ல பேசிடறோம். அவர் என் மேல ஏன் பொறாமைப்படணும்..? என் மேல நம்பிக்கை வைச்சு ‘சிவா என்னைவிட மேல வருவார்’ன்னு சொன்னவர் அவர். அவர் கணிப்பு கரெக்ட்டா இருக்குன்னா சந்தோஷம்தானே படுவார்..?”

புரிந்ததா ரசிகர்களே..? ‘அவர் கணிப்பு கரெக்ட்டா இருக்கு’ன்னா என்பதிலேயே ‘சிவா என்னைவிட மேலே வருவார்’ன்ற தனுஷின் வார்த்தை பலித்துவிட்டதாகவே சிவகார்த்திகேயனே சொல்வதாகத்தானே அர்த்தம்..!?

வாழ்க.. வளர்க..!

Our Score