full screen background image

‘தொப்பி’ படத்தின் ஹீரோவே அந்த குரங்கனி கிராமம்தான்..!

‘தொப்பி’ படத்தின் ஹீரோவே அந்த குரங்கனி கிராமம்தான்..!

சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நமது கண்களை தனது ஒளிப்பதிவால் குளிர்வித்து வருகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

‘மைனா’, ‘கும்கி’ திரைப்படங்களில் மலை கிராமத்தின் அடர்ந்த காடுகளையும், மலைப்பாதைகளையும் நம் கண் முன்னே நிறுத்தினார்.

‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’ படங்களில் வெளி நகர வாழ்க்கை, வெளிநாட்டு பாடல்கள் என தனது ஒளிப்பதிவில் வேறுவிதமான ஜாலத்தை திரையில் கொண்டு வந்தார்.

தற்பொழுது ‘தொப்பி‘ படம் மூலம் மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் குரங்கனி கிராமத்தை தன் ஒளிப்பதிவால் வேறு ஒரு பிரம்மாண்டத்துடன் காட்டியுள்ளார்.

cinematographer Sukumar

அவருடன் சில நிமிட பேட்டி :

கேள்வி : சுகுமார் ஒளிப்பதிவு செய்தால் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மத்தியில் நிலவுகிறதே..?

சுகுமார் பதில் : சந்தோஷமா இருக்கு, அந்த நம்பிக்கைக்கு நன்றி. இதுவரைக்கும் நான் ஒளிப்பதிவு செய்த படங்கள் அனைத்தும் மக்களுக்கு பிடித்தமான கதைகள்தான். நான் வேலை செய்த இயக்குநர்களும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். சினிமா என்பது கூட்டு முயற்சி. அனைவரும் ஒருங்கிணைந்து வேலை செய்தால்தான் வெற்றி கிடைக்கும். ஒரு இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் கணவன் மனைவி போல. கதைக்கு என்ன தேவையோ அதை சரியான அளவில் கொடுப்பதுதான் என் பாணி.

_DSC3143      

கேள்வி  : ‘தொப்பி’ படத்தில் உங்களை நாயகனாக நடிக்க கேட்டார்களாமே… உண்மையா… அப்படியிருந்தால் ஏன் சார் நடிப்புல இறங்கல….?

சுகுமார் பதில் : ஐயோ.. ஆமாங்க. ‘தொப்பி’ இயக்குனர் யுரேகா என்னிடம் இந்த கதையைக் கூறி நீங்கதான் நடிக்கனும்னு சொன்னார். எல்லாருக்கும் கண்ணாடிய பார்க்கும்போது நாமும்  அழகுதானே என்று தோணும். அந்த மாதிரிதான் ஆரம்பத்துல ஒத்துக்கிட்டேன். ஆனாலும் ஒரு பயம் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருந்தது. அதனாலே கடைசியில் நான் நடிக்கவில்லை. ஒளிப்பதிவு செய்ய முடிவு செய்தேன்.

_DSC1830   

கேள்வி  : நீங்கள் நடிக்க வேண்டிய படத்தில் இன்னொரு நடிகரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். அவர் அந்த வேலையை சரியாகச் செய்துள்ளாரா..?

சுகுமார் பதில் : முரளிராம் என்னுடைய நல்ல நண்பன். இந்த படத்தில் நான் நடிக்க முடியவில்லை என்றதும் அந்த போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு இவர் கச்சிதமாக இருப்பார் என்று கூறினேன். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் முரளிராமை பிடித்திருந்தது. முரளிராமும் இந்தக் கதைக்கு அவரது முழு உழைப்பை கொடுத்திருக்கிறார்.

_DSC1984     

கேள்வி : ‘தொப்பி’ எந்த மாதிரியான ஒரு படம்..?  ‘தொப்பி’ கதைக்கு ஒளிப்பதிவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது..?

சுகுமார் பதில் : தொப்பி ஒரு மலைவாசி இளைஞனின் லட்சியம் மற்றும் அதற்கு ஏற்படும் தடைகள் பற்றி கூறும் கதை. இந்தக் கதையின் ஆழத்தை புரிந்து அதற்கென்ன அம்சங்கள் தேவையோ அதைத்தான் செய்துள்ளோம். எனது எல்லாப் படங்களிலும் செய்வது போல கதையை மிஞ்சாமல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறேன்.

_DSC5085

கேள்வி  : மைனா, கும்கி இப்பொழுது ‘தொப்பி‘  என்று குரங்கனி கிராமத்தில் படப்பிடிப்பு ஏதேனும் காரணம் இருக்கிறதா ?

சுகுமார் பதில் : கதைக்களம்  ஒரு மலையோர கிராமம் என்பதால்தான் அங்கே படப்பிடிப்பு நடத்தினோம். இதற்கெல்லாம் மேலாக அந்த கிராமத்தின் அழகு அதன் மக்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அங்கே இருக்கும் மக்கள் எங்களை அவர்களுள் ஒருவராக பார்த்துக் கொண்டனர். இருப்பினும் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் கண்டிப்பாக இருந்திருக்கிறது… ‘தொப்பி படத்திலும் அந்த வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள்.

_DSC2110 

கேள்வி : பாடல் காட்சிகளில் உங்க ஒளிப்பதிவு பாணி வித்தியாசமாக உள்ளதே..?

சுகுமார் பதில் : அப்படி ஒன்றுமில்லை. பாட்டுக்கு என்ன தேவைன்னு இயக்குநர், நடன இயக்குநர் கேட்கிறார்களோ அதைத்தான் செய்கிறேன். 15  வருட காலம் புகைப்படத்துறையில் இருந்ததால் ஃப்ரேமிங் மற்றும் கலரிங் எனக்கு கொஞ்சம் தெரியும். அதற்கேற்றவாறு சில ஷாட்டுகள் அமைப்பேன். கடைசியில் பாட்டு ஃபீல் பண்ணனும்.. பாடல் வரிகளுக்கும், இசைக்கும் இதில் முக்கிய பங்குண்டு.

DSC_3445

கேள்வி  : ‘தொப்பி’ படத்தில் ‘இச்சு இச்சு’ பாடல் பரவலா பேசப்படுகிறது. அதில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள்.

சுகுமார் பதில் : ‘இச்சு இச்சு’ ஒரு Montage பாடல். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்த பின்பு Free time-லதான் இந்தக் காட்சிகளை எடுத்தோம். காட்சிக்கேத்த சூழ்நிலைகள் அமையாத பொழுது அந்த கால்ஷீட்டை வீணடிக்காமல் இந்த பாடலுக்கான காட்சிகளை எடுத்தோம்.  வைரமுத்து  சார் வரிகளும், இசையும் கூடுதல் பலமாய் அமைந்தது.     

கேள்வி  : இப்போதெல்லாம் இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என தொழில் நுட்ப கலைஞர்களும் நடிப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன..?

சுகுமார் பதில் : இன்னிக்கு நிலைமைக்கு தமிழ் சினிமாவுல பெரிய ஹீரோக்கள் மட்டும்தான் இருக்காங்க. ஒரு சின்ன படத்தில் நடிப்பதற்கு வணிக ரீதியான காரணங்கள் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. இதுதான் புது ஹீரோக்கள் வருவதற்கு முழு காரணமாக அமைந்துள்ளது. அதுல இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர்னு பேதம் எதுக்கு..? நடிப்பு என்பது ஒரு கதாபாத்திரத்தின் வாழ்வு முறைதான். அதை புரிந்து கொண்டு செய்து காட்ட வேண்டும்.  

Our Score