full screen background image

கதிர்-சிருஷ்டி டாங்கே நடித்த ‘சத்ரு’ திரைப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது

கதிர்-சிருஷ்டி டாங்கே நடித்த ‘சத்ரு’ திரைப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்ட்டர்டெயின்மெண்ட்  பட நிறுவனம் சார்பில்   ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சத்ரு.’ 

இந்தப் படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்திருக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் பொன்வண்ணன்,  நீலிமா,  மாரிமுத்து,  ரிஷி,  சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம்,  ரகுநாத், கீயன், சாது,  குருமூர்த்தி,  பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.    

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, இசை – அம்ரிஷ், பாடல்கள்   -கபிலன்,  மதன் கார்க்கி, சொற்கோ, படத் தொகுப்பு – பிரசன்னா.ஜி.கே., கலை இயக்கம் –  ராஜா மோகன், சண்டை இயக்கம் – விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  நவீன் நஞ்சுண்டான்.   

படம் பற்றி இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் பேசும்போது, “இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை. விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படம். ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்த படம் இது.

குற்றவாளிகளான. யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலிஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பதுதான் இந்த சத்ரு படத்தின் கதைச் சுருக்கம். 

இந்த படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு சார் படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய முன் வந்திருக்கிறார். அவருக்கு எங்களது நன்றி. தரமான படங்களாகவும், வெற்றி படங்களாகவும் இருந்த ‘மரகத நாணயம்’,  ‘ராட்சசன்’ என்று படங்களைப் பார்த்து, பார்த்து தயாரிக்கும் தயாரிப்பாளர் டில்லி பாபு எங்களது ‘சத்ரு’ படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். படம் வரும் மார்ச் 1-ம் தேதி திரைக்கு வர உள்ளது…” என்றார் இயக்குநர்.

Our Score