S.P.சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும், இன்னமும் பெயர் சூட்டப்படாத படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
இந்தப் படத்தில் யோகிபாபு, காயத்ரி, ரமேஷ் திலக், ‘எருமை சாணி’ விஜய், ‘கும்கி’ அஸ்வின், ‘ஜாங்கிரி’ மதுமிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – பரத் நீலகண்டன், தயாரிப்பாளர்கள் – S.P சங்கர், சாந்தப் பிரியா, இணை தயாரிப்பாளர்கள் – கிஷோர் சம்பத் & டெஷா ஸ்ரீ. டி, எழுத்து & இயக்கம் – பரத் நீலகண்டன், ஒளிப்பதிவு – அரவிந்த் சிங், இசையமைப்பாளர் – தர்புகா சிவா, படத் தொகுப்பு – ரூபன், திரைக்கதை ஆய்வு & ஒலி வடிவமைப்பு: உதயகுமார்.டி, தயாரிப்பு வடிவமைப்பு – கமலநாதன், சண்டை பயிற்சி – சுதேஷ், பாடல்கள் – தாமரை, நிர்வாக தயாரிப்பு – சதீஷ் குமார்.டி.
சில மாதங்களுக்கு முன் சிறிய சம்பிரதாய சடங்குகளுடன் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது மின்னல் வேகத்தில் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்சன் வேலைகள் பரபரப்பான வேகத்தில் நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெகுவிரைவில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
முன்னணி நடிகர்கள் அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய இருவருமே ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதைகளில் நடிப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டுபவர்கள். இருவரும் இணைந்து நடிக்கும் இந்த ‘தயாரிப்பு எண்-2’ மிகவும் சிறப்பான தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.